மதுரை, சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திகேயன் (19). இவர், அருப்புக் கோட்டை பிரதான சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்ற கார்த்திகேயன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் இல்லை. இது குறித்து, அவரது சகோதரியின் கணவர் ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், திலகர்திடல் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.