திருமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை அப்பகுதியில் மின்விநியோகம் இருக்காது என திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் வி.ரமணி தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி கிராமங்கள்.