மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வரும் 20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமையில் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச அக்குப்பஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. அதன்படி வரும் 20-ஆம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. பார்வை பரிசோதனை, கண் குறைபாடு உள்ள குழந்தைகள், கணினி பயன்படுத்துவோர், தலைவலி உள்ளவர்கள், நிறக்குருடு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்புரை கண்டறியப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் இலவச அக்குப்பஞ்சர் சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.