இருசக்கர வாகனங்கள் மோதல்: பெண் சாவு

திருப்பரங்குன்றம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தார்.


திருப்பரங்குன்றம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தார்.
 கள்ளிக்குடி சத்திரத்தை சேர்ந்த அப்துல்நாசர் மனைவி பரீதா (45). இவர், தனது மகன் முகமதுவுடன் (22) திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சென்றுவிட்டு, மீண்டும் கள்ளிக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
 அப்போது, விருதுநகரைச் சேர்ந்த அருண்குமார் (35) விருதுநகரை நோக்கி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தாராம். சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் சென்றபோது  அருண்குமார் வாகனம், முன்னால் சென்றுகொண்டிருந்த முகமதுவின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பரிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 அருண்குமார், முகமது ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com