மாநகராட்சியில் இன்று சிறப்புக் குறைதீர் கூட்டம்
மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 1 இல் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணைய மற்றும் மண்டல அலுவலங்களில் உதவிஆணையர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், கட்செவி அஞ்சல், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி மண்டலம் எண் 1 இல் சிறப்பு குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் பங்கேற்று மனுக்களை பெறுகிறார். பொதுமக்கள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய வரி விதித்தல், கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.