மேலூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளது.
மதுரை கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகர்வோர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று மின்விநியோகம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம். மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜா.பிரீட் பத்மினி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.