ஜூலை 15 இல் ஆலோசனைக்கூட்டம்

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை மாலை


மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற உள்ளது. 
மடீட்சியா அரங்கில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், வணிக வளாக உரிமையாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர். மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு மையங்கள் எவ்வாறு அமைப்பது, அதற்கான காலக்கெடு குறித்தும் விளக்கப்பட உள்ளது. இந்தக்கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவதில் அனுபவம் உள்ளவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com