அவனியாபுரத்தில் இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை

அவனியாபுரத்தில் வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவரை,  போலீஸார் தேடி



அவனியாபுரத்தில் வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவரை,  போலீஸார் தேடி வருகின்றனர்.  
அவனியாபுரம் செம்பூரணி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் வினோத்(23). கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சனிக்கிழமை அதிகாலையில் திடீரென அலறல் சப்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் வந்து பார்த்தபோது, வினோத் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுள்ளது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பலத்த காயமடைந்திருந்த வினோத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை மதியம் வினோத் உயரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அவனியாபுரம் போலீஸார், 
அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் ராஜமாணிக்கம் என்பவரை விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com