காமராஜர் பிறந்த நாள் போட்டி உசிலம்பட்டி பள்ளி முதலிடம்

மதுரை எஸ்விஎன். கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் உசிலம்பட்டி பள்ளி ஒட்டுமொத்த முதலிடம் பெற்றது. 


மதுரை எஸ்விஎன். கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் உசிலம்பட்டி பள்ளி ஒட்டுமொத்த முதலிடம் பெற்றது. 
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.ஜவஹர், சுயநிதிப்பிரிவு இயக்குநர் பி.ஸ்ரீதர் ஆகியோர் விழாவின் நோக்கம் குறித்து பேசினர். கல்லூரித் துணைத்தலைவர் கே.கே.சந்தோச பாண்டியன் மாணவ, மாணவியருக்கான போட்டிகளைத்தொடங்கி வைத்தார். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி உள்பட 24 பள்ளிகளில் இருந்து 385 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த முதலிடத்தை பெற்றனர். கலை மற்றும் பண்பாட்டுத்துறை நெறியாளர் எஸ்.மணிமாறன் வரவேற்றார். அத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com