மதுரை அருகே கத்தியைக் காட்டி தாய், மகளிடம் 10 பவுன் நகைகளை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திங்கள்கிழமை பறித்துச் சென்றார்.
மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி ரோவின்ஸ். இவரது மனைவி சிந்தாதிரை(26) கடைக்கு சென்றுவிட்டு தனது மகளுடன் சைக்கிளில் வீட்டின் அருகே வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 2 பவுன் வளையல், மகள் கழுத்தில் இருந்த 1 பவுன் சங்கிலி என மொத்தம் 10 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து சிந்தாதிரை அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.