உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
உசிலம்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த பெரியண்ணன் மகன் ராஜா (31). காலையில் பல் துலக்குவதற்காக தனக்குச் சொந்தமான கிணற்றின் உள்பக்கம் முளைத்த வேப்பமரத்தில் குச்சி உடைக்க சுற்று சுவரில் ஏறியுள்ளார். அப்போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.