பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி திருமங்கலத்தில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் அருகே  சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்குரைஞரும் வாதிடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com