திருமங்கலம் அரசு மருத்துவமனையில்  பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.  


திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.  
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி திருமங்கலம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டிப்பிரியா (20). தலைப் பிரசவத்துக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாண்டிப் பிரியாவுக்கு, ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.  
இது குறித்து திருமங்கலம் அரசு மருத்துவர்கள் கூறியது: 3 பெண் குழந்தைகளும் சுகப் பிரசவமாக பிறந்தன. குழந்தைகள் மூன்றும் எடை குறைவாக இருந்ததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது தாய் மற்றும் குழந்தைகள் மூவரும், மதுரை அரசு மருத்துவமனையில் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com