திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி திருமங்கலம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டிப்பிரியா (20). தலைப் பிரசவத்துக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாண்டிப் பிரியாவுக்கு, ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
இது குறித்து திருமங்கலம் அரசு மருத்துவர்கள் கூறியது: 3 பெண் குழந்தைகளும் சுகப் பிரசவமாக பிறந்தன. குழந்தைகள் மூன்றும் எடை குறைவாக இருந்ததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது தாய் மற்றும் குழந்தைகள் மூவரும், மதுரை அரசு மருத்துவமனையில் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தனர்.