வல்லடிகாரர் சுவாமி கோயிலில் அதிமுக வேட்பாளர் வழிபாடு

மேலூர் அருகில் அம்பலகாரன்பட்டியிலுள்ள வல்லடிகாரர் சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி மதுரை

மேலூர் அருகில் அம்பலகாரன்பட்டியிலுள்ள வல்லடிகாரர் சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிறப்பு வழிபாடு செய்தார்.
 இக்கோயில் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை உச்சிகால சிறப்பு பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர். ராஜ்சத்தியன், அவரது தந்தை வி.வி.ராஜன்செல்லப்பா, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வழிபாடு செய்ய வந்தனர். மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் க.தமிழரசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com