திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பி.சக்திவேல் புதன்கிழமை பிரசாரத்தை தொடக்கினார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மநீம வேட்பாளர் பி.சக்திவேல் "டார்ச் லைட்' சின்னத்தில் வாக்களிக்குமாறு சன்னிதி தெரு, பெரிய ரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர், அனைத்து வீட்டிற்கும் குடிநீர் வசதி, நியாய விலைக்கடையிலிருந்து பொருள்கள் வீட்டிற்கே நேரடியாக வழங்குவது, 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு , டோல் கேட் கட்டணம் ரத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்து வாக்குகள் சேகரித்தார். இதில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.