கஞ்சா விற்பனை: பெண் உள்பட இருவர் கைது

உசிலம்பட்டி அடுத்த சேடபட்டி அருகே வெள்ளிக்கிழமை 2.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 

உசிலம்பட்டி அடுத்த சேடபட்டி அருகே வெள்ளிக்கிழமை 2.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 
  சேடபட்டி பகுதிகளில் டி.கல்லுப்பட்டி காவல் ஆய்வாளர்  விஜயகாண்டீபன் தலைமையிலான  போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேடபட்டி பேருந்து நிறுத்தம்  அருகே பெரியகட்டளையைச் சேர்ந்த மான்ராஜா மனைவி மணியம்மாள்(45), மற்றும் பாலார்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மகன் பாண்டி(36) ஆகியோர் சந்தேகப்படும் நிலையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 2 கிலோ 500 கிராம்  கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com