திருப்பரங்குன்றம் தொகுதியில் வைகோ நாளை பிரசாரம்

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலையொட்டி மதிமுக பொதுச் செயலர் வைகோ புதன், வியாழன் (மே 8, 9)ஆகிய இரு நாள்களும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலையொட்டி மதிமுக பொதுச் செயலர் வைகோ புதன், வியாழன் (மே 8, 9)ஆகிய இரு நாள்களும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பா.சரவணனை ஆதரித்து, நாகமலை புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவர், கீழக்குயில்குடி, விளாச்சேரி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, வலையபட்டி, பெரியஆலங்குளம், ஓ.ஆலங்குளம், நிலையூர், கைத்தறி நகர் ஆகிய இடங்களில் வாக்குச் சேகரிக்கிறார். பின்னர் இரவு 8.30-க்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு,  மதுரையை அடுத்த சிலைமான் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கும்  அவர் புளியங்குளம், விரகனூர், ஐராவதநல்லூர், பனையூர், சிந்தாமணி, அனுப்பானடி மற்றும் வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு ஆகிய இடங்களில் வாக்குச் சேகரிக்கிறார். பின்னர் அவனியாபுரம் மந்தை திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com