திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலையொட்டி மதிமுக பொதுச் செயலர் வைகோ புதன், வியாழன் (மே 8, 9)ஆகிய இரு நாள்களும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பா.சரவணனை ஆதரித்து, நாகமலை புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவர், கீழக்குயில்குடி, விளாச்சேரி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, வலையபட்டி, பெரியஆலங்குளம், ஓ.ஆலங்குளம், நிலையூர், கைத்தறி நகர் ஆகிய இடங்களில் வாக்குச் சேகரிக்கிறார். பின்னர் இரவு 8.30-க்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு, மதுரையை அடுத்த சிலைமான் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கும் அவர் புளியங்குளம், விரகனூர், ஐராவதநல்லூர், பனையூர், சிந்தாமணி, அனுப்பானடி மற்றும் வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு ஆகிய இடங்களில் வாக்குச் சேகரிக்கிறார். பின்னர் அவனியாபுரம் மந்தை திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.