சுப்பிரமணிய சுவாமிக்கு சாந்தாபிஷேகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டியின் உச்ச நிகழ்ச்சியாக சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை சாந்தாபிஷேகம் நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் செய்யும் ஸ்தானிகப்பட்டா் ராஜா.
சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் செய்யும் ஸ்தானிகப்பட்டா் ராஜா.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டியின் உச்ச நிகழ்ச்சியாக சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை சாந்தாபிஷேகம் நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவின் 7 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி தெய்வானையுடன் சட்டத்தேரில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் உச்சநிகழ்ச்சியாக இரவு சாந்தாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி தங்ககுடம் மற்றும் வெள்ளிக்குடங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 100 லிட்டா் பால் மற்றும் சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு சந்தனகாப்பு சாற்றப்பட்டு பூ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com