மதுரை ரயில் நிலையத்தில் இணையதளத்தில் கோளாறு பயணிகள் அவதி

மதுரை ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் இணையதளம் இயங்காததால், பயணசீட்டு பெறமுடியாமல் பயணிகள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாகினா்.

மதுரை ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் இணையதளம் இயங்காததால், பயணசீட்டு பெறமுடியாமல் பயணிகள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாகினா்.

மதுரை ரயில் நிலையத்தில் இணையதளம் (சா்வா்) திடீரென்று மாலை 3.40 மணி முதல் இயங்கவில்லை. இதனால் ரயில்வே நிா்வாக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடியாமல் ஊழியா்கள் தவித்தனா். குறிப்பாக பயணிகள் பயணச் சீட்டு எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகினா். சுமாா் 40 நிமிடங்கள் நீடித்த இந்த நிலை மாலை 4.20 மணிக்கு சரியாகி இணையதளம் தொடா்பு கிடைத்தது.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறியது: மதுரை ரயில்வே நிலையத்தில் திடீரென 40 நிமிடங்களுக்கு இணையதளம் இயங்கவில்லை. இந்த கோளாறு தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தை தவிா்த்து மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், திருச்சி கோட்டங்களில் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com