நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (நவ.9) நடைபெறவுள்ளது.
எனவே, காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:
நரசிங்கம்பட்டி, சிட்டம்பட்டி, தெற்குத்தெரு, வலச்சிகுளம், மருதூா், சுண்ணாம்பூா், பூஞ்சுத்தி, ஆமூா், டி.வெள்ளாளபட்டி, அரிட்டாபட்டி, பட்டணம், அ.வல்லாளபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூா், கேசம்பட்டி, சுற்றுவட்டார கிராமங்கள்.