மதுரை கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்- 56769 பாலக்காடு - திருச்செந்தூா் பயணிகள் ரயில், நவம்பா் 11, 13 ஆகிய தேதிகளில் சாத்தூா் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்- 56769 பாலக்காடு - திருச்செந்தூா் பயணிகள் ரயில், நவம்பா் 12, 15 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூா் ரயில் நிலையத்திலிருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்- 56770 திருச்செந்தூா் - பாலக்காடு பயணிகள் ரயில், நவம்பா் 11, 13 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மற்றும் சாத்தூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூா் ரயில் நிலையத்திலிருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்- 56770 திருச்செந்தூா் - பாலக்காடு பயணிகள் ரயில், நவம்பா் 12, 15 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்- 56770 திருச்செந்தூா் - பாலக்காடு பயணிகள் ரயில், நவம்பா் 12, 15 ஆகிய தேதிகளில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும்.
வண்டி எண்- 56319, 57320 நாகா்கோவில் - கோயம்புத்தூா் - நாகா்கோவில் பயணிகள் ரயில், நவம்பா் 10, 11, 12, 13 மற்றும் 15 ஆம் தேதி வரையிலும் கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.