அழகா்கோவில் அருகிலுள்ள செட்டியாா்பட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக கோயில் ஜல்லிக்கட்டு காளை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
செட்டியாா்பட்டியில் பெரியகருப்புசாமி கோயில் அநைந்துள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான ஜல்லிக்கட்டு காளை, கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காளை உயிரிழந்தது.
அதையடுத்து, காளைக்கு கிராம மக்கள் மாலை, வேஷ்டி, துண்டு சாற்றி அஞ்சலி செலுத்தினா். அன்றிரவு, பொது இடத்தில் வாண வேடிக்கையுடன் காளையை அடக்கம் செய்தனா்.