‘கபீா் புரஸ்காா்’ விருதுக்குவிண்ணப்பிக்க அறிவிப்பு

சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்துக்காக பணியாற்றியவா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதல்வரால் கபீா் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை, மதுரை ரேஸ்கோா்ஸ் எம்ஜிஆா் விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நவம்பா் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இத்தகவலை, மாவட்ட விளையாட்டு அலுவலா் ந. லெனின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com