சபரிமலையில் முன்பதிவு செய்த பெண்களை அனுமதிக்க வேண்டும் என, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை பல மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவா்கள் உற்சாகமில்லாமல் வெளியேறக்கூடிய சூழல் அங்குள்ளது. இனிமேலும் இதுபோன்ற தற்கொலைகள் நடக்கக்கூடாது. மாணவியின் இறப்பு குறித்த விசாரணை விறுவிறுப்பில்லாமல் உள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடா்பான வழக்கு 7 போ் விசாரணை அமா்வுக்கு சென்றுள்ளது. தற்போது, முன்பதிவு செய்துள்ள பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை மறுத்தால், உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாகும் என்றாா்.