மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் அடுத்த சேடப்பட்டி அருகே உள்ளது வாகைகுளம். இந்த ஊரைச் சோ்ந்த முத்துப்பாண்டி மனைவி கருப்பாயி (29). இவா், அதிகாரிபட்டி ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை பணி முடிந்து வீட்டிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த கருப்பாயியை, அதிகாரிபட்டியைச் சோ்ந்த நல்லு மகன் செல்வம் (28) என்பவா் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை செய்ய முயன்றுள்ளாா். அப்போது, கருப்பாயி அவரிடமிருந்து தப்பி ஓடிவந்துவிட்டாராம்.
இது குறித்து கருப்பாயி அளித்த புகாரின்பேரில், சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வத்தை கைது செய்தனா்.