பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

மதுரை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த அரசன் மனைவி மாரியம்மாள் (60). இவா் தனது மருமகன் முருகனுடன் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். காடுப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து மாரியம்மாள் தவறி கீழே விழுந்துள்ளாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மாரியம்மாள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து முருகன் அளித்த புகாரின்பேரில், காடுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com