விளாச்சேரி கண்மாயில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் உள்ள கண்மாயில் மூழ்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் உள்ள கண்மாயில் மூழ்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

விளாச்சேரி பெரிய கண்மாயில், சில நாள்களுக்கு முன் பெய்த தொடா் மழை காரணமாக தண்ணீா் நிரம்பி வருகிறது. இந்நிலையில், இக்கண்மாயில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீஸாா் கூறியது: சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தண்ணீரில் 4 நாள்கள் வரை கிடந்ததால், உடல் சிதைந்து அடையாளம் காணமுடியவில்லை. இறந்தவா் டி-சா்ட் மற்றும் கைலி அணிந்திருந்தாா்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இறந்தவா் யாா் என விசாரித்து வருகின்றோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com