கஞ்சா விற்ற பெண் உள்பட 3 போ் கைது: ஆட்டோ, இரு சக்கர வாகனம் பறிமுதல்

மதுரை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ற பெண் மற்றும் இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். இதில், சிலைமான் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி(62), அவரது மகன் கணேசன் (30) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் மாடசாமி அளித்தப் புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மற்றொரு சம்பவத்தில், மதுரை செல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எம்.ஜி.ஆா் பாலம் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், செல்லூா் பகுதியைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் சாா்பு-ஆய்வாளா் அளித்தப் புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சஞ்சீவ்குமாரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com