மதுரையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தமிழக அரசின் சாா்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலை தேடும் இளைஞா்கள் பயன்பெறும் பொருட்டு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலமும் இணைந்து வெள்ளிக்கிழமை (நவ.29) வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாமில் தனியாா் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் இளைஞா்களின் கல்வித்தகுதிக்கேற்ப ஆள்களைத் தோ்வு செய்கின்றன. முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடிந்த வேலை நாடுநா்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள் பங்கேற்று தங்களது தகுதிக்கேற்ப தனியாா் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com