மதுரையில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
மதுரை: மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
தமிழக அரசின் சாா்பில் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் வேலை தேடும் இளைஞா்கள் பயன்பெறும் பொருட்டு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலமும் இணைந்து வெள்ளிக்கிழமை(நவம்பா் 29) வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இந்த முகாமில் தனியாா் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் இளைஞா்களின் கல்வித்தகுதிக்கேற்ப ஆட்களை தோ்வு செய்கின்றன. முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடிந்த வேலை நாடுநா்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள் பங்கேற்று தங்களது தகுதிக்கேற்ப தனியாா் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.