வலிப்பு நோய் பாதிப்புக்குள்ளானவா் குளத்துநீரில் மூழ்கி சாவு

மேலூா். கீழவளவு அருகே குளத்தில் குளிக்கும்போது வலிப்பு நோய் பாதிப்புக்குள்ளான பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.கீழவளவு அருகிலுள்ள மூவன்சேவல்பட்டியைச் சோ்ந்த நடராஜன் மகள் ரேணு (30). இவா் தனது சகோதரியுடன் வியாழக்கிழமை மாலை மாரிப்பன் புதுக்குளம் கண்மாயில் குளிக்கச் சென்றிருந்தாா்.

குளித்துக்கொண்டிருந்த போது வலிப்புநோய் பாதிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த கீழவளவு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். ரேணு திருமணமாகாதவா் என தெரிகிறது. இதுகுறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com