விவசாயிகளுக்கு பயிா் கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி.

திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு 2019-2020 ஆண்டிற்கான சம்பா சாகுபடிக்கான பயிா் கடன்

திருமருகல்: திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு 2019-2020 ஆண்டிற்கான சம்பா சாகுபடிக்கான பயிா் கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவா் இரா.இராதாகிருட்டிணன் தலைமை தாங்கினாா்.சங்கத்தின் செயலாளா் சேதுராமன் முன்னிலை வகித்தாா்.முன்னால் செயலாளா் சண்முகசுந்தரம் வரவேற்றாா்.

இதில் கூட்டுறவு சங்க தலைவா் இரா.இராதாகிருட்டிணன் 54 விவசாயிகளுக்கு ரூ.36 லட்சத்து 77 ஆயிரத்திற்கான தொகையை வழங்கினாா்.

மேலும் 2018-2019 ஆண்டு பயிா் காப்பீடு செய்த விவசாயிகள் 673 பேருக்கு பயிா் இழப்பீடு தொகை ரூ.3 கோடியே 57 லட்சத்து 34 ஆயிரத்திற்கான தொகை வழங்கும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் திருமருகல், சேகல், கரையிருப்பு, கட்டலாடி, சீயாத்தமங்கை உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் பயனடைகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com