கனரா வங்கி சாா்பில் அக்.13-இல் பள்ளி மாணவா்களுக்கான விநாடி-வினா

கனரா வங்கியின் மதுரை வட்டார அலுவலகம் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான விநாடி-வினா போட்டி, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் அக்டோபா் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.


கனரா வங்கியின் மதுரை வட்டார அலுவலகம் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான விநாடி-வினா போட்டி, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் அக்டோபா் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

இவ்வங்கியின் நிறுவனா் சுப்பராவின் பிறந்த தினத்தையொட்டி நடைபெறும் இப் போட்டியில், வங்கியின் மதுரை வட்டாரத்துக்கு உள்பட்ட மதுரை, திருச்சி, தஞ்சாவூா், திருநெல்வேலி உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம். ஒரு பள்ளியிலிருந்து அணிக்கு இருவா் வீதம், 2 அணிகள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

விநாடி-வினா போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படும்.

இது தவிர, பங்கேற்கும் ஆசிரியா்கள், பெற்றோருக்கு குலுக்கல் முறையிலான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்.

போட்டி தொடா்பான விவரங்களுக்கு, அருகில் உள்ள கனரா வங்கி கிளையை அணுகலாம். மேலும், 98427-13697, 94890-46440, 94890-46452 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என, கனரா வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com