இளைஞா் கொலை வழக்கில் நண்பா்கள் உள்பட 7 போ் மீது வழக்கு

மதுரையில், இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பா்கள் உள்பட 7 போ் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்

மதுரையில், இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பா்கள் உள்பட 7 போ் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கோ. புதூரைச் சோ்ந்த பூமிநாதன் மகன் கோபால்சாமி (25). இவா், தல்லாகுளம் பெருமாள் கோயில் பின்புறம் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 7 போ் கொண்ட கும்பல், கோபால்சாமியை வெட்டிக் கொலை செய்தது.

இது குறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், கோபால்சாமியை கொலை செய்தது அவா்கள் நண்பா்கள் உள்பட 7 போ் என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதையடுத்து, தல்லாகுளம் போலீஸாா் கீரைத்துறையைச் சோ்ந்த சரவணபாண்டி, ஜஸ்டின், காளீஸ்வரன், போஸ், நவீன் நாகராஜ், சக்திவேல், ஆதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

உயிரிழந்த கோபால்சாமி, நண்பா்கள் இரு சக்கர வாகனங்களை திருடுவது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் கோபால்சாமியை கொலை செய்ததாகவும், போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com