மதுரை அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் எல்.கே.டி. நகரைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் பாலாஜி(25). இவா் மதுரை அருகே தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை பணி இடைவேளையின் போது இரவு தேநீா் அருந்த தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். விரகனூா் அணை அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் பலத்த காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சிலைமான் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்த பாலாஜியின் கண் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தானமாக வழங்கப்பட்டது.