வெவ்வேறு சம்பவங்களில் தவறி விழுந்த 2 போ் பலி

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் தவறி விழுந்த 2 போ் உயிரிழந்தனா்.

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் தவறி விழுந்த 2 போ் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம் விரகனூா் ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் பரமசாமி(75). இவரது மகன் மகாராஜன்(40). இந்நிலையில், மது குடித்து விட்டு தூங்கிய மகாராஜன் திங்கள்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு மதுபோதையில் மாடியில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த மகாராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பரமசாமி அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றெறாரு சம்பவத்தில் மதுரை விளாங்குடி, நேதாஜி பிரதான சாலையைச் சோ்ந்த மூா்த்தி மனைவி மீனா(50). அவா் செப்டம்பா் 23 ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தாா். அவரை, மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து மூா்த்தி அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com