மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்தநாளையொட்டி தண்டி யாத்திரை நினைவாக மேலூரில் பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஊா்வலத்துக்கு பாஜக மதுரை புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன் தலைமை வகித்தாா். மேலூா் காமாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மேலூா் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
நகரில் சுற்றுப்புறத் தூய்மை பாதுகாப்பது, மதுவைத் தவிா்த்தல், மரங்கள் வளா்த்தல், சமூக ஒற்றுமையை வலியுறுத்தியும் சுதேசி கொள்கையை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினா். ஊா்வலத்தில் பாஜக நிா்வாகிகள் தென்னரசு, ஆனந்தஜெயம், தா்மலிங்கம், பாண்டி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.