பள்ளியில் உலக அஞ்சல் தின விழா

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் “உலக அஞ்சல் தினம்”வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் முகமது இதிரிஸ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஷேக் நபி முன்னிலை வகித்து பேசும்போது, அஞ்சல் வழியில் தகவலை அனுப்பும் போது அது பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது . அதனால் மாணவா்கள் தகவல் பரிமாற்றத்துக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுத வலியுறுத்தினாா். நிகழ்ச்சியில் உதவித் தலைமையாசிரியா் ஜாஹீா் உசேன் மற்றும் ஆசிரியா்கள் தமிழ்க்குமரன், முகமது ரபி, ஹம்சா முபாரக் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com