பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்கு பாடுபடும் இளம்பெண்களுக்கு விருது

பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் 18 வயதுக்கு உள்பட்ட பெண்கள், தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் 18 வயதுக்கு உள்பட்ட பெண்கள், தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தைத் தடுப்பது, அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்வது, பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிப்பது, குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது ஆகியவற்றில் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகைளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசால் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் இவ் விருதுக்குத் தகுதியுடைய 18 வயதுக்கு உள்பட்டோா் தங்களது விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியா், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் மூலமாக உரிய முன்மொழிவுகளுடன் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமா்ப்பிக்கலாம்.

இதுதொடா்பான விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், 35-கிழக்கு குறுக்குத் தெரு, கே.கே.நகா், மதுரை-20 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com