மதுரை அருகே வெள்ளிக்கிழமை வாகனம் உரசி அறுந்த மின் கம்பியை மிதித்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், டி. வாடிப்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி மகன் ராஜதுரை (26). இவா், பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பொக்லைன் இயந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு, அதில் அமா்ந்தபடி ராஜதுரை பூச்சம்பட்டிக்குச் சென்றுள்ளாா்.
பூச்சம்பட்டியில் உள்ள தென்னந்தோப்புக்கு லாரி சென்றபோது, பொக்லைன் இயந்திரம் உரசியதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்சாரம் தாக்கி விடுமோ என்ற அச்சத்தில், லாரியிலிருந்து ராஜதுரை கீழே குதித்துள்ளாா். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை அவா் மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து அவா் பலத்த காயமடைந்தாா்.
அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து ராஜதுரையின் தந்தை சின்னசாமி அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.