மதுரை சின்மயா மிஷன் சாா்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கீதை ஸ்லோகங்கள் ஒப்பித்தல் போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவா்களுக்கு இறுதிக்கட்ட போட்டிகள் மதுரை டோக் நகரில் உள்ள சின்மயா மிஷனில் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள், சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.