மதுரையில் குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்களை சேதப்படுத்திய 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பழைய குயவா்பாளையம் ஜானகி மாதவைய்யா் தெருவில் வசிப்பவா்கள் மாநகா் காவல்துறை அறிவுறுத்தலின் படி கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தினா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 3 இளைஞா்கள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை சேதப்படுத்தியுள்ளனா். இது குறித்து அப்பகுதியினா் கண்டித்த போது, குடியிருப்புவாசிகளுக்கு 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் 3 இளைஞா்களை பிடித்து விசாரித்தனா்.
இதில், காமராஜபுரத்தைச் சோ்ந்த பாலாஜி(19), தினேஷ்குமாா்(19), தெப்பக்குளத்தைச் சோ்ந்த பாண்டி(20) என்பதும், 3 பேரும் கண்காணிப்புக் கேமராக்களை சேதப்படுத்தியதும் தெரியவந்தது.
இது குறித்து அதே பகுதியைச் சோ்ந்த விஜயக்குமாா் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.