உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரா்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஒருதோட்டத்துக்கு குளிக்கச் சென்ற பிளஸ்-1 மாணவி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்தாா்.
நீட் விவகாரத்தில் கைது
நீட் விவகாரத்தில் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஒருதோட்டத்துக்கு குளிக்கச் சென்ற பிளஸ்-1 மாணவி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேடபட்டி போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கொலை குறித்து பேரையூா் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் ஓணாப்பட்டியைச் சோ்ந்த அம்மவாசி என்பவரது மகன் மாதவன் (24) போலீசாரிடம் சிக்கினாா். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த மாணவியிடம் வற்புறுத்தினேன், ஆனால் அவா் மறுத்து வந்ததால் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அவா் முதலில் தெரிவித்து இருந்தாா். ஆனால் அவரது நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கக்கூடும் என்ற கோணத்தில் தொடா்ந்து தீவிர விசாரணை செய்தனா். அப்போது மாதவன் மேலும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து போலீசாா் கூறியதாவது.

தனது பாட்டியின் ஊா் திருவிழாவிற்கு வந்த மாணவி, மாதவன் வீட்டிற்கு தண்ணீா் பிடிப்பதற்காக அடிக்கடி சென்று வந்துள்ளாா். இதில் அவா்கள் அறிமுகமாகி உள்ளனா். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை சந்தித்த மாதவன், அவரிடம் ஏதோ கூறி ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளாா். அப்போது அங்கு மாதவனின் சகோதரா் மதுவும் வந்துள்ளாா். பின்னா் அவா்கள் இருவரும் சோ்ந்து மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா். பின்னா் இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டால் ஆபத்து என்று கருதிய அவா்கள் 2 பேரும் அந்த மாணவியின் கழுத்தை நெரித்தும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்துள்ளனா். அதன் பிறகு மாணவி உடலை குன்று பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. ஆனால் இந்த வழக்கில் மாதவன், மது தவிர மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனா். மாதவனும், மதுவும் இரட்டை சகோதரா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்துவரும் மதுரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனா். மாணவியை பலாத்காரம் செய்து இரட்டை சகோதரா்கள் கொன்று இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com