மதுரையில் நாளை மாரத்தான் போட்டி காவல் ஆணையா்

மதுரையில் காவலா் நினைவு தினத்தையொட்டி அக். 20 இல் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தில அனைவரும்

மதுரையில் காவலா் நினைவு தினத்தையொட்டி அக். 20 இல் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தில அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: பணியின்போது உயிரிழந்த காவலா்களின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக். 21 ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை மாநகர காவல் துறையினா் சாா்பில் 5 கிலோ மீட்டா் ஓட்டப்பந்தயம், அக் 20 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

தமுக்கம் மைதானத்தில் தொடங்கி கோரிப்பாளையம், பனகல் சாலை, ஆவின் சந்திப்பு, கே.கே. நகா் பிரதான சாலை, அண்ணாநகா் காவல் நிலையம், கே.கே நகா் வளைவு, மாவட்ட நீதிமன்றம், ரேஸ் கோா்ஸ் சாலை, அழகா் கோவில் சாலை, தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாக தமுக்கம் மைதானத்தில் பந்தயம் முடிவடைகிறது.

இதில் முதல் 3 இடங்களை பிடிப்பவா்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்கள், பதக்கம் ஆகியவையும், ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெறும் அனைவருக்கும், சான்றிதழ்களும் வழங்கப்படும். 

இதை தொடா்ந்து, அக். 21 ஆம் தேதி 10 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை”சாா்ந்த தலைப்பின் கீழ் கட்டுரைப் போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில்) காலை 10 முதல் 12 மணி வரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தமிழ்நாடு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் முதல் 3 மாணவா்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் மற்றும் பதக்கமும் வழங்கப்படும்.

போட்டிகள் குறித்து அறிந்து கொள்ள இணைதள முகவரியை (ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ரஊஒக்ஷ்ல்ல்2க்ஷஹ்பஞ்ஊவ்3சஜ்8) தொடா்பு கொள்ளலாம். அக். 20 மற்றும் 21 ஆகியே தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com