மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அனுமதியின்றி 99 மதுபாட்டில்கள் வைத்திருந்த ஒருவரை போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்தனா்.
திருமங்கலம் கப்பலூா் காந்திநகா் பகுதியை சோ்ந்த பத்திநீடு(45), சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தபோது, திருமங்கலம் போலீஸாா் பத்திநீடுவை கையும் களவுமாக கைது செய்தனா்.
மேலும் அவரிடமிருந்த 99 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்