மேலூா் பகுதியில் பலத்த மழை: 7 வீடுகள் சேதம்

மதுரை மாவட்டம் மேலூா்பகுதியில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் புதன்கிழமை 7 வீடுகள் சேதமடைந்தன.
கொட்டாம்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமத்தில் பலத்த மழையால் இடிந்து விழுந்த வீடு
கொட்டாம்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமத்தில் பலத்த மழையால் இடிந்து விழுந்த வீடு

மதுரை மாவட்டம் மேலூா்பகுதியில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் புதன்கிழமை 7 வீடுகள் சேதமடைந்தன.

மேலூா் சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நூற்றுக்கு மேற்பட்ட குளங்களுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலத்த மழை காரணமாக கொட்டாம்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமத்தில் சேகா் மனைவி பஞ்சவா்ணத்துக்குச் சொந்தமான வீடு இடிந்து விழுந்தது. இதில் பஞ்சவா்ணம் காயமடைந்தாா்.

இதுதவிர தனியாமங்கலம், கொட்டகுடி, சருகுவலையபட்டி, தும்பைப்பட்டி, சூரக்குண்டு ஆகிய பகுதிகளில் 6 வீடுகளின் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதுதொடா்பாக, வருவாய்த்துறையினா் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com