கல்லூரிப் படிப்பைத் தொடர கல்விக்கடன் கோரி  மதுரையைச் சேர்ந்த மாணவி மனு தாக்கல்

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், தனது கல்லூரிப் படிப்பைத் தொடர வங்கியில் கல்விக்கடன்

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், தனது கல்லூரிப் படிப்பைத் தொடர வங்கியில் கல்விக்கடன் வழங்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த மாணவி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.
மதுரையைச் சேர்ந்த காயத்ரி தாக்கல் செய்த மனு:
2017-இல் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., விமான பராமரிப்பு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். அங்கு எனக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவருக்கான கல்வி உதவித் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து மத்திய அரசின் வித்யா லட்சுமி கல்விக் கடன் திட்டத்தில் கல்விக்கடன் வேண்டி மதுரை ஒத்தக்கடையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் விண்ணப்பித்தேன். அங்கு எனது தந்தை மற்றும் எனக்கு போதுமான "சிபில் ஸ்கோர்' இல்லை எனக் கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 
இதையடுத்து கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டேன்.  இந்நிலையில் மதுரை மாநகராட்சி ஊழியரான எனது தந்தைக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனால் எனது படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எனக்கு கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வங்கி தரப்பு வழக்குரைஞர் ஆஜராகததால் வழக்கு விசாரணையை செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com