மதுரை அருகே வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (72). இவர் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 மர்ம நபர்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் . இதில், அவருக்கு கை முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, பச்சையம்மாளுக்கு சக்கிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிலைமான் போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.