ஆனையூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (செப்டம்பர் 25) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்: தினமணி நகர், பழைய மற்றும் புது விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐஓசி நகர், விஎம்டபிள்யு காலனி, ரயிலார் நகர், சங்கீத் நகர், சொக்கலிங்க நகர், கூடல்நகர் 1 முதல் 13-ஆவது தெரு வரை, அகில இந்திய வானொலி நிலைய சாலை, செல்லையா நகர், ஆனையூர், ஜே.ஜே. நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை.