தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு பாா்வா்டு பிளாக் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் பி.வி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நான்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கும், நான்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கும் பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் தோ்தல் பணியாற்றி அவா்களை வெற்றிபெற வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.